Friday, June 22, 2012

விவேகானந்தரின் பொன்மொழிகள்!



பெரியவர்கள் பெருந்தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம்.

இந்த உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து நீ தப்பி ஓட முயற்சி செய்யாதே. வெற்றியா தோல்வியா என்று நீ கவனித்துக் கொண்டிருக்காதே. பரிபூரனமான தியாக உள்ளத்துடன் சேவையில் ஈடுபடு. வெற்றி பெறுவதர்காகவே பிறந்துள்ள மனம், உறுதியுடன் தானாகவே இணைந்து, விடா முயற்சி செய்கிறது என்பதி உணர்ந்து கொள்.

கடவுளிடம் நம்பிக்கையில்லாதவன், தத்துவ தர்சனங்கள் இல்லாதவன், மதப்பிரிவு எதிலும் சேராதவன், எந்த ஒரு கிறிஸ்தவக் கோயிலுக்கும் ஹிந்து கோவிலுக்கும் செல்லாதவன், லௌகிகப் பற்றிலேயே தோய்ந்து போனவன் என்று இப்படியெல்லாம் ஒருவன் இருந்தாலும் கூட அவனும் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதைப் புத்தர் பெருமானுடைய வரலாறு காட்டுகிறது.

ஒரு யாகத்தில் விலங்குகளைப் பலியிடுவதைத் தடுத்து நிறுத்த தம் உயிரை வழங்க முன்வந்தவர் அவர் ஒருவரே! " நீ சொர்கம் போவதர்கு ஒரு ஆட்டுக்குட்டியைப் பலியிடுவது உதவி செய்யுமென்றால், ஒரு மனிதனைப் பலியிடுவது அதைவிடவும் அதிகமாக உனக்கு உதவி செய்யும். எனவே என்னை நீ பலியிடு" என்றார். அதைக் கேட்ட அந்த அரசன் வியப்படைந்து போனான்.

நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள். மற்றவர்களுடைய நன்மைக்காக அறிஞன் தன்னைத் தானே தியாகம் செய்துவிட வேண்டும். உனக்கு நான் நன்மை செய்வதன் மூலமாகத்தான் என்னுடைய நன்மையை நான்பெற முடியும். இதைத் தவிர வேறு ஒரு வழியுமில்லை.

கிராமம் கிராமமாகச் சென்று மனிதகுலத்திற்கும் பரந்த இந்த உலகத்திற்கும் நன்மை செய். மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கும் செல்ல வேண்டும். மரணம் வருவது இவ்வளவு உறுதியாக இருக்கும் போது நல்ல ஒரு காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.

Wednesday, June 20, 2012

அம்பேத்கார் ஒரு தீர்க்க தரிசி - சில வரலாற்று நினைவுகள்!


Mr. B. R. Haran, Senior Journalist, Chennai
ஹிந்துஸ்தானம்! இந்த பெயரை உச்சரிப்பதையே செக்யூலரிசம் என்ற பெயரால் நிறுத்திவிட்டார்கள்.இங்கே ஹிந்துக்கள் பெரும்பான்மையினர். ஆனால் என்ன பயன்? பெரும்பாலும் திட்டமிட்டுத் தாக்கப்படுவது ஹிந்துக்களும் அவர்களது பாரம்பரியங்களும் நம்பிக்கைகளும் தான்! ஹிந்துக்களின் குடும்ப முறை திட்டமிட்டு அழிக்கப்பட்டும் வருகிறது. இவற்றை எல்லாம் செம்மையாகச் செய்வது ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் மீடியாக்கள். "அதான் தெரியுமே! இப்போ என்ன அதுக்கு" என்கிறீர்களா?

அது பற்றிய ஒரு செய்தியை மூத்த பத்திரிக்கையாளர் பி ஆர் ஹரன் கோவாவில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் பேசியிருக்கிறார்:

செய்தி: ஹிந்துஜாக்ருதி!


Ramnathi, Ponda (Goa) : Hindu unity that is going to result from the All India Hindu Convention is going to be an achievement to be proud of. To be able to do that Hindu organisations should put in spirited efforts. The Indian media, under the pretext of Secularism, repeatedly attacked the religious customs, traditions, Temples etc. which are the conservators of the Indian culture. The media has become eager to destroy the Hindu line of thinking from India. These views were expressed by Mr. B.R. Haran on the last day of the All India Hindu Convention. He was speaking on the topic of ‘Hindus and the Media’ !   

During the speech, he gave some examples to prove the point as followed :

1. Repeatedly defaming Shankaracharya, Dharmacharyas, Chiefs of sects, Saints, Mahants    along with Sabarimala, Amarnath Temple, Kanchi Kamkoti Peeth, Jagannath Puri etc.
2. Organising debate sessions during festivals-celebrations such as Deepavali, Durgapuja, Janmashtami, Kumbhamela, Ganesh immersion, Ayyappa Makar Jyoti etc.
3. Purposefully avoid topics such as ‘Abolishing Article 370 of the Constitution’, ‘Hanging Mahammad Afzal’, ‘Bringing Common Civil Code’, ‘Passing a law to ban religious conversions’ etc.
4. Glorifying the western culture

How should the code of conduct for the media be ?
1. Do not give entry to Political parties or the Politicians in the media
2. Ban reality shows.
3. Do not publish the investigative articles without proofs.
4. There should be a selection committee for advertises.
5. Those news items that disturb the communal harmony should be banned.
6. The educational organisations being run by the Hindu sects should include course in  journalism in the curriculum.


மேற்கண்ட செய்தியைப் படிக்கும்கால் சில விஷயங்களை யோசிக்கத் தோன்றுகிறது. ஹிந்துக்களின் நம்பிக்கைகளும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தொடர்ந்து திறந்த முறையில் தடையில்லாமல் தாக்கப்பட்டு வருகிறது. இந்நாட்டின் தலைவர்களின் ஏகோபித்த ஆதரவு இல்லாமல் இந்த தாக்குதல்கள் தான் சாத்தியமாஇந்த தலைவர்கள் அனைவருமே ஹிந்துக்களின் மீதான தொடர்ந்த தாக்குதலை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

அதற்கு மூலக்காரணம்இந்நாடு சுதந்திரம் அடையும் காலகட்டத்திலேயே தெளிவான மக்கள் சார்ந்த உரிமைக் கொள்கைகள் வகுக்கப்படாமல் ஒரு குழம்பியக் குட்டையாகவே ஆட்சிக் கொள்கைகளை வரையறுத்து ஒரு மாபெரும் நாட்டின் பெரும்பான்மை மக்களை வாழ்வுரிமை இழந்து நிற்கும் அளவிற்கு இட்டுச் சென்றனர்  இந்த நாட்டை வழிநடத்துவதாக தம்மைக் காட்டிக் கொண்ட தலைவர்கள் என்றே தோன்றுகிறது.

பல்வேறு வரலாற்று விஷயங்கள் மூலம் இந்த தேசத்தின் பெரும்பான்மை மக்களான ஹிந்துக்களின் வாழ்க்கையும் அவர்தம் சூழ்நிலைகள் பற்றிய எண்ணங்களையும் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் முழுமனதுடன் புறக்கனித்திருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்து கொள்ளமுடிகிறது. உதாரணமாக காஷ்மீர் பண்டிட்டுக்கள் இன்றும் சொந்த நாட்டின் அகதிகளாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பரிக்கப்பட்ட உடமைகள் எதுவும் அவர்களுக்கு திருப்பி வழங்கப்படவில்லை. அவர்கள் உற்றார் உறவினர்களின் பறிக்கப்பட்ட உயிர்களுக்கு இது வரை ஞாயம் வழங்கப்படவில்லை. ஆனால் இவை எல்லாம் தெரிந்தே புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது வாழும் வரலாறு.

இப்படிப்பட்ட புறக்கனிப்பு இன்று தான் புதிதாக நடக்கிறாதா என்றால் இல்லை! ஹிந்துக்களையும் அவர்தம் உணர்வுகளையும் புறக்கனிப்பது என்பது காங்கிரஸின் வியாதி. ஆனால் காங்கிரஸின் இந்த வியாதியைத் தெரிந்து கொண்டு நாட்டுப் பிரிவினையின் போது தெளிவான அறிவுரை வழங்கியவர் திரு. அம்பேத்கார் அவர்கள்! 

சில வரலாற்று நினைவுகளைப் பார்ப்போம்:- 

1932 ஏப்ரல் 16ந் தேதி பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டனால்டு தலைமையில் அரசாங்கமே 'வகுப்பு வாரித் திட்டம்' ஒன்றை அறிவித்தது. அப்பொழுதே சிறுபான்மை ஜால்ராவையும் அதன் மூலமாக உருவாகியிருக்கும் பாரபட்சத்தையும் சுட்டிக்காட்டியவர் டாக்டர் அம்பேத்கார் :-

"இந்த வகுப்புவாரி திட்டம் முஸ்லிம் மற்றும் ஹிந்து சிறுபான்மையினரை பாரபட்சமில்லாமல் நடத்தத் தவறிவிட்டது.  இது ஹிந்து மாகானங்களில் வாழும் முஸ்லிம் சிறுபான்மையினர் தொகுதிக்கு சுய நிர்ணய உரிமை தருகிறது. ஆனால் அதே உரிமையை முஸ்லிம் மாகாணங்களில் வாழும் ஹிந்து சிறுபான்மையினருக்குத் தரவில்லை. ஹிந்து மாகானங்களில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினர் தாங்கள் விரும்பியபடி தொகுதி அமைத்துக் கொள்ள உரிமை உள்ளது. ஆனால் முஸ்லிம் மாகாணங்களில் தொகுதிகளை நிச்சயிக்க முஸ்லிம்களுகு மட்டுமே உரிமை உண்டு. ஹிந்து சிறுபான்மையினருக்கு இதில் உரிமையே கிடையாது. அதாவது இந்தத் திட்டம் ஹிந்து சிறுபான்மையினர் மீது முஸ்லிம் ஆட்சியைத் திணிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்."  என்று கண்டித்திருக்கிறார்.

-  தேசப்பிரிவினையின் சோக வரலாறு,  ஹொ வெ சேஷாத்ரி


பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கார்


"1940 வது வருடமே டாக்டர் அம்பேத்கார் பிரிவினைப் பற்றிய பெரும் எச்சரிக்கைகளைச் செய்திருந்தார். ஆனால் அதையெல்லாம் ஏற்காது கண் மூடித்தனமாக நாடு பிரிக்கப்படது. அதன் விளைவு - 10 லக்ஷம் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் கடத்தல், கற்பழிப்பு, கட்டாய மதமாற்றம் என எல்லாம் நடந்தன. ஹிந்து சமுதாயத்தின் அனுமதி, ஆலோசனைகளை பெறாது நடந்த கொடூரம் பாகப்பிரிவினை. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நேருவும் காங்கிரஸ் தலைவர்களும் இல்லை. முஸ்லீம் லீக் தலைவர்களும் இல்லை. அப்பாவி ஹிந்துக்கள் தான்.

பிரிவினையின் போது நடந்த கோர நிகழ்ச்சிகள் வெளி வராமல் தடுக்கப்பட்டன. கோடிக்கணக்கான ஹிந்துக்கள் வட இந்தியத் தெருக்களில் அகதிகளாகத் திரிந்தனர். 10 லக்ஷம் ஹிந்துக்களின் உயிர் பறிக்கப்பட்டது யாருடைய தவறால், 2 லக்ஷம் பெண்கள் கடத்தப்பட்டது யாருடைய தவறான கொள்கையால்? தங்கள் தவறை இவர்கள் ஒப்புக் கொண்டார்களா? ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்டார்களா? இல்லை.

எதுவும் நடக்காதது போல உடனே பிரிக்கப்பட்ட இந்தியாவின் பிரதம மந்திரியாக வெட்கமில்லாமல் எந்த வருத்தமும் இல்லாமல் தன்னை ஆக்கிக் கொண்டு, இந்த ஹிந்துப் படுகொலைகள் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டார் நேரு! அவரைப் பிரதமராக்கி அழகு பார்த்தார் காந்தி."

பிரிவினை நடந்த பிறகும், இந்தியா 'எல்லோருக்கும் சொந்தமான' நாடாகுமா? டாக்டர் அம்பேத்காரைத் தவிர யார் இதைப் பற்றி நினைத்துப் பார்த்தார்கள்? இந்தியா "ஹிந்து நாடு" என்று அறிவிக்க விரும்பினார். ஹிந்துக்கள் மாத்திரம் குடிமகன்களாகக் கொண்ட நாடு என்று அறிவிக்க அம்பேத்கார் விரும்பினார். பிரிவினையைத் தடுக்க இயலாத பட்சத்தில் மக்கள் பரிமாற்றமும் நடக்க வேண்டும் என்றார். பாகிஸ்தான் பகுதியில் உள்ள ஹிந்துக்கள் இந்தியாவிற்கும், இந்தியப் பகுதியில் உள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் மாற்றப்பட வேண்டும் என்று சொன்னார். அதை மூதறிஞர் ராஜாஜியும் ஆதரித்தார். ஆனால் அவ்வாறு நடக்க விடவில்லை நேருவும் காங்கிரஸ் தலைவர்களும்.

சரி, 'ஹிந்து நாடு' என்பதுதான் அறிவிக்கப்படவில்லை. எனினும், ஹிந்து கலாச்சாரம், பழம்பெரும் ஹிந்துபாரம்பர்யம் முதலானவற்றை முன் நிறுத்தி, பெரும்பான்மையான ஹிந்துக்களின் உரிமையை வலியுறுத்தியாவது அரசியல் சாசனம் இயற்றப்பட்டதா? இல்லையே!

இந்தியா "ஒரு மதச்சார்பற்ற நாடு" என்று அரசியல் சாசனம் கூறிவிட்டது. எல்லோருக்கும் சொந்தம். ரத்தம் சிந்தி கிடைத்த பிறகு கூட எல்லோருக்கும் சொந்தம்! ரத்தம் சிந்த வைத்தவர்களுக்கும் நாட்டை பிரித்தவர்களுக்கும் கூட சொந்தம்! இந்தக் கேவலம் எந்த நாட்டிலும் நடவாதது.

ஆனால் நாட்டைப் பிரித்துக் கொண்டு போனவர்கள் தங்கள் பகுதியை "இஸ்லாமிய நாடு" என்று அறிவித்தனர்! ஆனால் இங்கே "வெள்ளைக்காரனை வெளியே போ" என்று தீர்மானம் போட்டுவிட்டு வெள்ளைக்காரனையே சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜனரலாக வைத்துக் கொண்ட கேவலம் நடந்தேறியது!

 - ஹிந்து மித்ரன், மாத இதழ்

மேற்கண்ட வரலாற்றுச் செய்திகளைப் படித்துப் பார்க்கும் போது ஒரு விஷயத்தை நன்றாக ஊகிக்க முடிகிறது. காங்கிரஸ் அன்று முதல் இன்று வரை ஹிந்துக்களின் வாழ்வின் மீது அலட்சியப் போக்கும் வெள்ளை அடிமைத்தனத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதும் தெரியவருகிறது. அதே நேரத்தில் பிரிவினையின் போது என்ன செய்யவேண்டும் என்றும் அதனைச் செய்யாவிட்டால் பாரதத்தின் தலையெழுத்து என்னாவாக இருக்கும் என்கிற தீர்க்கதரிசனம் பாபா சாகேப் டாக்டர்.அம்பேத்காரிடம் தெளிவாக இருந்தது என்பதையும் நாம் உணர முடிகிறது.

அம்பேத்கார் சொன்னதைப் போல பிரிவினையின் போது முழுமையான மக்கள் பரிமாற்றம் நடந்திருந்தால் காங்கிரஸின் செக்யூலரிச போர்வைக்கு வேலை இருந்திருக்காது. காஷ்மீரத்து பண்டிட்டுகள் சொந்த நாட்டின் அகதிகளாக விரட்டியடிக்கப்படிருக்க மாட்டார்கள்.  இந்தியா முழுவதும் இத்தனை முறை தடையில்லாமல் குண்டுகள் வெடித்திருக்காது. அவ்வகையில் டாக்டர்.அம்பேத்கார் எதிர் வரும் பிரச்சனைகள் பற்றி தெளிவு கொண்டிருந்த தீர்க்கதரிசியே ஆகிறார்!

டாக்டர். அம்பேத்கார்

Sunday, June 17, 2012

விரதங்களும் நன்மைகளும் - 1



மனிதன் என்பவன் மற்ற எல்லா ஜீவராசிகளையும் போல இயற்கைத்தாயின் கருப்பைக்குள் இருக்கும் சிறிய அணு தான். இயற்கையின் இறுக்கமான தாக்கத்திலிருந்து மனிதன் என்றும் விடுபட்டுவிட முடியாது. விஞ்ஞானத்தாலும் அதனை சாதிக்க முடியாது. நம் உடல் இந்த பூமி மற்றும் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் மற்ற கிரகங்களின் ஆதிக்கத்தையும் பொறுத்தே தன் இயக்கத்தை நடத்துகிறது. 

கிரகங்களின் தாக்கம் இல்லையென்றால் நம் உடற்சுழற்சியே மாறுபட்டு விடும். அவற்றை நன்றாகப் புரிந்து கொண்டிருந்த நம் முன்னோர்கள் கிரகங்களின் சுழற்சிக்க்கேற்ப உடலில் ஏற்படும் மாறுபாட்டை உணர்ந்து கொண்டார்கள். கிரகங்களின் தாக்கத்திற்கு வளைந்து கொடுத்து வாழத்துவங்கினார்கள். அதன் ஒரு பகுதி தான் விரதங்கள்.

விரதங்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் முக்கியமானவை உண்ணாமல் இருக்கும் விரதம், பேசாமல் இருக்கும் மௌன விரதம், ஒரு நாள் முழுவதும் உப்பில்லாமல் சாப்ப்டும் விரதம் போன்றவைகள் ஆகும்.

முதலில் உண்ணா விரதம் பற்றி பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த நாளின் தன்மைக்கேற்ப நீர்மமாகவோ, கூழாகவோ, அல்லது காலையில் மட்டும் உண்டு மற்ற நேரங்களில் நீர்மமாகப் பருகி வயிற்றுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் இருக்கும் விரதம்.

காரணம் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு புவி ஈர்ப்பு விசை முக்கியக் காரணம். புவிஈர்ப்பு விசையினால் ஏற்படும் கீழ் நோக்கிய அழுத்தம் இல்லையென்றால் நம் உடற்கழிவுகள் வெளியேறவே செய்யாது. ஆக வயிற்றிலிருக்கும் உணவு செரிப்பதும், கழிவுகள் வெளியேறுவதும் புவி ஈர்ப்பு விசை சார்ந்தே இருக்கிறது.

வீட்டுப் பெரியவர்கள் முக்கியமாக விரதம் இருக்கும் நாள் ஏகாதசி. குறிப்பிட்ட இந்த நாளில் என்ன விஷேஷம் என்று தோன்றலாம். இந்த குறிப்பிட்ட நாளில் புவி ஈர்ப்பு விசை அதிகமான இருக்கும் நாளாக கருதப்படுகிறது. காரணம் சூரியனிலிருந்து சந்திரன் அதிக தூரம் விலகி வரும் நாட்களில் பூமியில் அதன் ஈர்ப்பு சக்தி அதிகரிப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.

உதாரனமாக அமாவாசையிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி தூரம் சந்திரன் சூரியனிலிருந்து விலகுகிறது. அவ்வாறு தினம் தோறும் பிரிந்து அமாவாசையிலிருந்து 11 ஆம் நாளான ஏகாதசியன்று சூரியனிலிருந்து சந்திரன் 132 டிகிரியில் விலகியிர்ப்பதால் அந்நாளில் பூமியில் குறிப்பிட்ட அளவு புவியீர்ப்பு விசை அதிகரிக்கிறது என்கிறார்கள். 

ஆக புவியீர்ப்பு விசை அதிகமாக இருக்கும் பட்சத்தில் உடலில் ஜீரண மண்டலம் அதிக கீழ் நோக்கிய விசையால் ஈர்க்கப்படும். உண்ணும் உணவை செரிமானம் செய்யும் பொருட்டு அதிகமான விசையுடன் இயங்கும். அந்த நாளில் நாம் அதிகமாக உணவு உட்கொண்டால் ஈர்ப்பு விசையின் வேகத்திற்கு உணவு செரிக்காமல் அஜீரணக் கோளாறு மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படலாம். வாயுத்தொல்லைகள் பெருகலாம்.

என்றைக்கும் ஒரே மாதிரியான உணவு உட்கொண்டாலும் ஒரு சில நாட்களில் நம்மை அறியாமல் வயிற்றுக்கு உபாதைகள் நேர்வதை நில நேரங்களில் நாம் உணரமுடியும். வித்தியாசமாக எதுவும் சாப்பிடவில்லை, ஆனாலும் என்னவோ வயிறு சரியில்லை என்று உணவைத் தவிர்க்க நேரிடும். காரணம் இது போன்ற சில நாட்களை நாம் கவனத்தில் கொள்ளாமல் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரியாக உணவை உள்ளே தள்ளுவதால் நாளடைவில் உண்டாகும் வயிற்றுக் குறைபாடாக அது தெரியவருகிறது.

ஆகையால் நம் செரிமான மண்டலங்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்கும் விதமாகவே ஏகாதசி போன்ற நாட்களில் உண்ணா நோன்பாகவோ அல்லது நீர்மமாகவோ , கூழ்மாமாகவோ மட்டும் உணவருந்தி வயிற்றையும் செரிமான உறுப்பையும் பாதுகாக்கும் ஏற்பாட்டை நம்முன்னோர்கள் செய்து வந்திருக்கிறார்கள் எனலாம். இயந்திரங்களை அவ்வப்பொழுது கழுவி சர்வீஸ் செய்வது போலே வயிற்றுக்குள் உணவு போடாமல் கழுவி செய்யப்படும் சர்வீஸ் எனக்கொள்ளலாம்! உடலும் ஒரு இயந்திரமே! அதற்கும் முறையான சர்வீஸ் தேவை. அத்தகைய 'periodical service' தான் விரதங்கள்!

ஆனால் ஒரு விஷயம், எதைத் தின்றாலும் செரிமானம் ஆகிவிடும் அளவு உடல் உழைப்பைக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ஏகதசியாவது, அமாவாசையாவது!


Monday, June 11, 2012

வீட்ல விஷேஷங்க!





"வீட்ல விஷேஷங்க! ஃபங்க்ஷன் வெச்சிருக்கோம்! அவசியம் உங்க குடும்பத்தோட வரனும், குழந்தைகளையும் கூட்டிட்டு வாங்க!" என்று நம் உறவினர்கள் அவர்கள் வீட்டு விஷேஷங்களுக்கு அல்லது சுபகாரியம், பூஜைகளுக்கெல்லாம் வீடு வந்து அழைத்து விட்டு செல்வதுண்டு.


பெரும்பாலும் குடும்ப விஷேஷங்களுக்கு வீட்டுப் பெரியவர்கள் மட்டுமே வருவது வழக்கமாகி விட்டது. வீட்டுக் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வருவதே இல்லை. கேட்டால் 'அவளுக்கு டியூஷன் இருக்கு, அவனுக்கு ஹிந்தி க்ளாஸ் இருக்கு, அவன் ஸ்விம்மிங் போயிருக்கான், அவள் யாரோ ப்ரண்டு பர்த் டேன்னு போயிருக்கா' என்று பெரும்பாலும் ஏதாவது காரணங்களை நம் உறவுக்காரர்கள் கொடுக்கிறார்கள்.

விஷேஷங்களுக்கு குழந்தைகள் வந்து என்ன செயப் போகின்றன என்கிற அலட்சியப் போக்கு ஒரு காரணம்! நான் மட்டும் போய் தலையைக் காட்டிவிட்டு வந்து விடுகிறேன் என்று பெரியோர்களில் யாரேனும் ஒருவரோ அல்லது இருவரோ சென்று வருவார்கள்.

நம் கலாச்சாரம் சமூகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளிலும் கோவில் திருவிழாக்களிலும் மட்டும் இருப்பதில்லை. ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கும் சின்னச் சின்ன சுபகாரியங்கள் பூஜைகள் அல்லது ஏதாவது ஒரு விஷேஷ நிகழ்ச்சிகளிலும் அடங்கி இருக்கிறது. நம் வீட்டில் வளரும் குழந்தைகள் அது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிந்தவரை கலந்து கொள்ளும் போது அவர்கள் தங்கள் குடும்ப கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் உணர ஒரு வாய்ப்பாக அமைகிறது. அது மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தில் உள்ள உறவினர்களுடன் பாசத்துடன் பழகும் குணமும் பலரது அறிமுகமும் கிடைக்கிறது. இதனால் வளரும் குழந்தைகளுக்கு மனோரீதியான ஒரு உற்சாகம் எப்போதும் கூடவே இருக்கும். ஆனால் பெரும்பாலான குடும்ப நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகள் வருவதென்பதே ஏறக்குறைய இல்லை என்றே ஆகிவிட்டது.

அது மட்டுமல்லாமல் பிள்ளைகள் அங்கே வந்து என்ன செய்யப் போகிறார்கள் என்கிற அலட்சிய மனப்பான்மையும் இருக்கிறது. உறவினர்கள் வீடுகளில் சின்ன சின்ன விஷேஷங்கள் சுப காரியங்கள் என்று ஏதாவது இருந்தாலும் வீட்டுப் பிள்ளைகளை குழந்தைகளை கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும். உறவினர்களுடன் குழந்தைகள் அதிக நேரம் செலவழிக்க மாதம் ஒருமுறையேனும் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இல்லையேல் சொந்த சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா உறவுகள் கூட அவர்களுக்கு அந்நியமாகப் போய்விடுகிறது. ஒன்று விட்ட சகோதர சகோதரி உறவுகள் அறிமுகம் இல்லாமலேயே வாழ்க்கை சென்று விடுகிறது. இது குடும்பம் என்கிற சங்கிலிப் பிணைப்புக்கு பாதிப்பாகிறது.

அந்த குடும்பம் என்கிற ஆதாரத்தால் இயங்கும் கலாச்சாரத்திற்கும் கேடு விளைவிக்கிறது. அதனால் குழந்தைகளை அடிக்கடி உறவினர்கள் வீட்டு விஷேஷங்களுக்கு அழைத்துச் செல்லுதலை வலியுறுத்த வேண்டும். கலாச்சார பாரம்பரியத்தை காக்கப் போவது அடுத்த தலைமுறை பிள்ளைகள் அல்லவா! அனைவரும் அதனை உணர்ந்து நம் பாரம்பரிய குடும்ப உறவு முறைகளைக் காக்க வேண்டும். நம் மக்கள் மனது வைத்து செய்வார்கள் என்று நம்புவோமாக!

Monday, June 4, 2012

குணங்களுக்கும் மேலே என்னைப் பார்!




 ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு குணங்களின் தன்மை பற்றி இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்.

குந்தியின் மகனே! உலகில் தோன்றும் எல்லா உயிர்களுக்கும் இயற்கைதான் பிறப்பிடம். நான் தான் விதை கொடுக்கும் தந்தை!


பெருந்தோளாய்! இயற்கையிலிருந்து தோன்றும் சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் 
குணங்கள் உடலில் வாசம் செய்யும் உயிரை உடலோடு பிணைக்கின்றன.

பாபமற்றவனே! இவற்றுள் களங்கம் இல்லாத சத்வம் எனப்படுவது ஒளி பொருந்தியது.
துன்பம் கொடுக்காதது. இன்பத்தையும், ஞானத்தையும் உண்டாக்கும் பற்றை அது வளர்க்கிறது.

குந்தியின் மகனே! ரஜஸ் என்ற ரஜோ குணம் ஆசை வடிவுடையும்து, அது காம வேட்கையையும்பற்றுதலையும் உண்டுபண்ணும் என்பதை அறிந்து கொள். அது செயலின் மேல் பற்றுதலை ஏற்படுத்தி, உயிரை உடலோடு பிணைக்கிறது.

பாரதா! தமோ குணமோ, அறியாமையில் பிறந்தது. அது உயிர்களை எல்லாம் 
மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது. அசட்டை, சோம்பல், தூக்கம் ஆகிய இயல்புகளால் உயிரை உடலோடு பிணைக்கிறது.

பாரதா! சத்வம் சுகத்திலும், ரஜஸ் கர்மத்திலும், தமஸ் அரிவை மறைத்து கவனமில்லாத தன்மையிலும் சேர்த்து விடுகிறது.

அர்ஜுனா! சத்வம், ரஜசையும், தமஸையும் அடக்கி மேலெழுகிறது. ரஜஸ், சத்வத்தையும், தமஸையும் அடக்கி ஆள்கிறது. அவ்வாறே தமஸ், சத்வத்தையும், ரஜஸையும் அடக்குகிறது. இந்த உடலின் பொறிவாயில் அனைத்திலும் எப்பொழுது ஞான ஒளி பிரகாசிக்கிறதோ, அப்பொழுது சத்வ குணம் மேலோங்கி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்!

சத்துவ குணம் கொண்டவர்கள் மேன்மை பெறுகிறார்கள். ரஜோ குணம் படைத்தவர்கள்
இடையில் இருக்கிறார்கள். தமோ குணம் உள்ளவர்கள், இழிவான குணம் உள்ள காரணத்தால் தாழ்வடைகிறார்கள். 

அர்ஜுனா! ஒருவன் எப்பொழுது குணங்களைத் தவிர செயல்படுவோன் எவரையும் காணாமல்குணங்களுக்கு மேலான பரம்பொருளைக் காண்கிறானோ, அப்பொழுது என்னை வந்தடைகிறான்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்